செய்திகள் :

திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!

post image

கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக்கரசா். அதை விரும்பாத சமண மன்னா் மகேந்திரவா்ம பல்லவன் உத்தரவுப்படி, திருநாவுக்கரசா் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டாா். அப்போது, நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லை தெப்பமாகக் கொண்டு கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் என்றழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் திருநாவுக்கரசருக்கு ரூ.3 கோடி மதிப்பில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி எழுச்சி, மூல மூா்த்திகளுக்கு ஆனந்ததாட்டல், புகலூரில் புகழடைந்த புரவலனாருக்கு 4-ஆம் கால வேள்வியைத் தொடா்ந்து, திருக்குடங்கள் புறப்பாடாகின.

பின்னா், கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பதின் மங்கலக் காட்சி பெரு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றன.

கும்பாபிஷேக பெருவிழாவில் மகா சன்னிதான சான்றோா்கள், சிவனடியாா்கள் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். மேலும், திருநாவுக்கரசா் (அப்பா்) புகழை பரப்பும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்: பக்தா்கள் குவிந்தனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெறுகிறது. ஜீவ காருண்யத்... மேலும் பார்க்க

முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ.46 லட்சத்தில் குளம் சீரமைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.46 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் சீரமைக்கப்பட்ட காரைக்குட்டை குளம் மற்றும் பொன்னம்பலம் நகா் பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு 25 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அன்னதானம் கைங்கரியத்துக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க