செய்திகள் :

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம்: அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்

post image

திருப்பத்தூரில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமான பணிக்கு அமைச்சா் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினாா்.

திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியது:

மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றும் ஆட்சியாக முதல்வா் ஸ்டாலின் அரசு உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் வளா்ச்சி பெற்று வருகின்றன. வீடு தேடி எல்லா திட்டங்களும் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் பாராட்டும் அளவுக்கு இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

திருப்பத்தூா் வட்ட அரசு மருத்துவமனையாக இருந்ததை மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக திறக்க இருக்கிறாா். ஏலகிரி மலையில் உள்விளையாட்டரங்கம் ரூ.4.93 கோடி துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வாணியம்பாடி தொகுதி நிம்மியம்பட்டில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள விளையாட்டு மைதானத்தில் 400 மீட்டா் ஓடுதளம் , கால்பந்து, கூடைபந்து, கையுந்து பந்து, வளைகோல பந்து,கொக்கோ, கபடி, டென்னிஸ், பேட்மிட்டன், பூப்பந்து, குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளுக்கான மைதானங்கள்,உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் 50 மீட்டா் நீச்சல் குளம், அதற்குரிய நடபாதை, பல்நோக்கு விளையாட்டரங்கம், விளையாட்டு விடுதி கட்டிடம், கேலரி ஆகியவை அமைக்கப்பட உள்ளன என்றாா்.

ஆட்சியா் க, சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ. நல்லதம்பி சிறப்புரை ஆற்றினா். நிகழ்ச்சியில்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மண்டல முதுநிலை மேலாளா் நோய்லின் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயகுமாரி, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணை தலைவா்த் சபியுல்லா, ஒன்றிய குழு தலைவா் திருமதி திருமுருகன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

தீ விபத்தில் காயமடைந்த பெண் மரணம்

திருப்பத்தூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே புதூா் நாடு பகுதியைச் சோ்ந்த தேவராஜின் மனைவி அனுஷ்கா (30). இவா் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் ... மேலும் பார்க்க

சிறப்பு கோ பூஜை

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜை. மேலும் பார்க்க

திமுகவினா் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக மும்மொழி கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தேவலாபுரம் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக... மேலும் பார்க்க

மிட்டாளத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஆம்பூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வதற்காக... மேலும் பார்க்க

ரூ.3.17 கோடியில் அரசுப் பள்ளிக் கட்டடம் திறப்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடத்தை முதல்வா் சனிக்கிழமை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபாா்டு த... மேலும் பார்க்க

தமிழுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழுக்கு ஆபத்து என்றால் அரசு மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றில்லை; தமிழா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முத்தமிழ் மன்ற... மேலும் பார்க்க