செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜன் செல்லப்பா காட்டம்

post image

"அதிமுக குறித்து உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம்" என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் சங்கீதா

மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் வந்து மனு அளித்த ராஜன் செல்லப்பா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக ஜனவரி 30 ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிமுக பங்கேற்றுக் கையெழுத்திட மறுத்து வெளியே சென்று விட்டது என்ற தவறான தகவலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக மாவட்டச்செயலாளர் என்ற முறையில் எனக்கும், மாவட்ட நிர்வாகிகளையும் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. நாங்கள் கலந்துகொள்ளாத கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளியேறினோம் என்று மாவட்ட ஆட்சியர் கூறுவது எப்படி ? அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் அதிமுக மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் தவறான தகவலைத் தந்துள்ளனர். எங்கள் மீது பழியைச் சுமத்தி உள்ளார். இந்த அறிக்கை செய்தித்துறையும் உளவுத்துறையும் சேர்ந்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது, உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

ராஜன் செல்லப்பா

திருப்பரங்குன்றம் கோயில் பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் வழங்குகிறதோ அதன்படி நாங்கள் செயல்படுவோம். இந்த பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளான எங்களை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது... அது நிச்சியம் பழிவாங்கும்" - கண்ணீர்விட்ட ஷேக் ஹசீனா

வங்க தேசத்தில் மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்று ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு வங்கதேச மாணவர்களின் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு பதவிநீக்கம் செய்... மேலும் பார்க்க

Trump: ``நெதன்யாகுவுக்கு 'கைது வாரண்ட்' தவறு" - சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சாடியுள்ளார்.கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெள்ளை மாள... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலின்... | Photo Album

திருநெல்வேலியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் கட்சிக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்தார். புகழ் பெற்ற நெல்லை இருட்டு கடை அல்வா கடையில்... மேலும் பார்க்க

TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாநில அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். சமீபத்தில் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பெற்று அதுகுறித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' - அதிமுக அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளிய... மேலும் பார்க்க