செய்திகள் :

திருப்பூர்: "ஏன் இந்த ஆஸ்பத்திரில சேர்த்தீங்க?" - கொலையில் முடிந்த நாய்க்கடி பிரச்னை; என்ன நடந்தது?

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர், திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே உள்ள குமாரனந்தபுரம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

கருப்பசாமியின் தங்கை பிரியாவும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரியாவின் மகள் பவதாரணி நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெரு நாய் ஒன்று சிறுமி பவதாரணியைக் கடித்துள்ளது.

இதில், காயமடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வரும் பவதாரணியைப் பார்ப்பதற்காக கருப்பசாமி வந்துள்ளார்.

அப்போது தங்கையின் கணவர் கார்த்திகேயனிடம், 'எதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தீர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்க வேண்டியது தானே' எனக் கேட்டுத் தகாத வார்த்தையால் திட்டியதாகத் தெரிகிறது.

கருப்புசாமி

அப்போது கார்த்திகேயனின் அக்கா கணவர் குலசிவேலு (51) என்பவரும் குழந்தையைப் பார்க்க வந்துள்ளார். அவர் கருப்பசாமியிடம் நாய் கடித்தால் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கருப்பசாமி, குலசிவேலுவைத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கருப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குலசிவேலுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க