செய்திகள் :

திருமணமான நபருடன் காதல்; உயிரிழந்த கல்லூரி மாணவி - பின்னணி என்ன ?

post image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

குடும்பச் சூழல் காரணமாக, விருத்தாசலத்தில் முத்து என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் மாலை நேரத்தில் மட்டும் பணியாற்றி வந்திருக்கிறார்.

நேற்று மாலை செல்போனில் பேசிக்கொண்டே கடையின் பின்புறம் சென்றிருக்கிறார் கண்மணி. சிறிது நேரத்தில் கடை ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஊழியர் ராஜ்குமார் என்பவர், கண்மணி தூக்குப் போட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

மாணவி தற்கொலை

அதைக் கேட்டு அதிர்ந்துபோன கடை ஊழியர்கள், பின்புறம் இருக்கும் அறைக்கு ஓடியிருக்கின்றனர். ஆனால் அதற்குள் அங்கு தன்னுடைய துப்பட்டாவில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார் கண்மணி. அதையடுத்து ஊழியர்கள் விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், கண்மணியின் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை மற்றும் தம்பி இருக்கின்றனர்.

குடும்ப வறுமை காரணமாகவே கண்மணி பார்ட் டைம் வேலைக்கு வந்திருக்கிறார். கடையின் உரிமையாளர் முத்துவின் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.

அதில் இரண்டாவது மனைவியின் மகன்தான் ராஜ்குமார். தம்பி என்ற முறையில் அவரை கடையைப் பார்த்துக் கொள்ள உடன் வைத்திருந்தார் முத்து. அப்போதுதான் கண்மணிக்கும், ராஜ்குமாருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் கடையை சரியாக பார்த்துக் கொள்வதில்லை என்று, அவரைக் கடையில் இருந்து நிறுத்திவிட்டார் முத்து. அதில் சோகமான கண்மணி, ராஜ்குமாரிடம் மணிக்கணக்கில் செல்போனில் பேசியும், கடைக்கு வெளியில் அவரைச் சந்தித்தும் வந்திருக்கிறார்.

சடலமாக மாணவி கண்மணி

ராஜ்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். அந்த விவகாரம் தெரிந்ததால்தான் கண்மணி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறோம்.

கண்மணியும், ராஜ்குமாரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று ராஜ்குமாரிடம் கூறியிருக்கிறார் கண்மணி.

அதன்பிறகுதான் கடைக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார் ராஜ்குமார். தற்போது தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார் கிடைத்தால்தான், தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்” என்றனர்.

திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

BJP எம்.பி. மனைவியை ஏமாற்றிய கும்பல்; ரூ.14 லட்சம் பறிப்பு - நடந்தது என்ன?

நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் பெண்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை பறித்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: நாடோடி சமூக பள்ளி மாணவனைத் தாக்கிய தலைமை ஆசிரியர்; இருவர் கைது; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாவீரன் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நாடோடி பழங்குடி வகுப... மேலும் பார்க்க

ஒயின் ஷாப்பில் பிடிபட்ட நோட்டு; அலர்ட்டான போலீஸ்; கைதான கும்பல் - கரூர் அதிர்ச்சி

கரூரில் கடந்த 9 - ம் தேதி தாந்தோன்றிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன் (வயது 52) என்பவர் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொ... மேலும் பார்க்க

UP: "உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல" - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராகுல் பாபு. இவர் இரவில் எமர்ஜென்சி பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்நேரம் 4 போலீஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந... மேலும் பார்க்க

மும்பை: '100 சிம் கார்டுகள், ஆபாச மெசேஜ், பொது இடத்தில் பாலியல் தொல்லை' - இளைஞருக்கு போலீஸ் வலை

சிலர் சோசியல் மீடியாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் வரக்கூடிய நட்பு கோரிக்கையை ஏற்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒ... மேலும் பார்க்க