செய்திகள் :

கனிமொழி பொதுக்கூட்டத்தில் திடீரென புகுந்த ஆம்புலன்ஸ்; நாகர்கோவிலில் நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு- தீர்மான உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இருக்கைகள் போடப்பட்டுவிட்டதால் அனைத்து வாகனங்களையும், அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் போன்றவற்றையும் அருகில் உள்ள சாலை வழியாக திருப்பிவிடும்படி மேயர் மேடையிலேயே தெரிவித்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி பேச முற்பட்ட சமயத்தில் திடீரென கூட்டத்தின் பின்பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை பார்த்த மேயர் மகேஷ், "அனைத்து வாகனங்களையும் வேறு பாதையில் திருப்பிவிடும்படி கூறிவிட்டோம். அது போலீஸ் வாகனமாக இருக்கும்" என்றார். ஆனால், கனிமொழி எம்.பி சுதாரித்துக்கொண்டு, "அது ஆம்புலன்ஸ்தான், கொஞ்சம் வழிவிடுங்கள். நிச்சயமாக நம்மால் வழிவிடமுடியும். சேர்களை ஒதுக்கி வழிவிடுங்கள்" என்றார். உடனே அந்த வழியாக ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.

கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்ஸ்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேயர் ஆம்புன்ஸுக்கு வழிவிடவேண்டாம் எனக்கூறியதாக விமர்சனம் எழுந்தது. இதுபற்றி மேயர் மகேசிடம் பேசினோம், "அந்த பொதுக்கூட்டத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் வாகனங்களை மாற்று வழியில் விடும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்தோம். அதிலும் குறிப்பாக ஆம்புலன்ஸ் வந்தாலும் மாற்று வழியில் வேகமாக அனுப்பிவைக்கும்படி கூறினேன்.

நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டம்

அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்துக்குள் வந்தது. ஏன் என்று விசாரித்தபோது பொதுக்கூட்டத்துக்கு வந்த ஒருவர் மயங்கிவிட்டதாக கூறினர். உடனே இருக்கைகளை அகற்றி ஆம்புலன்ஸுக்கு வழிவிடும்படி கனிமொழி எம்.பி கூறினார். ஆம்புலன்ஸை வரக்கூடாது எனக்கூறுவதற்கு எடப்பாடி கூட்டம் அல்ல இது, தலைவரின் மகள் என அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். வேறு எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்., கனடா- நெதன்யாகு எதிர்ப்பு; இந்தியா நிலைப்பாடு?|அலசல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் கரம் தினம் தினம் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆ... மேலும் பார்க்க

50% வரி, Chabahar, H-1B விசா; வரிசைக்கட்டி உள்ள பிரச்னைகள்... அமெரிக்கா செல்லும் பியூஷ், ஜெய்சங்கர்!

இன்று அமெரிக்காவில் ஆறாவது கட்ட இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடக்க உள்ளன. (இந்திய நேரப்படி இன்று இரவு)இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா... மேலும் பார்க்க

திருப்பதி கோயிலில் ரூ.100 கோடி ஊழல்! - ஜெகன்மோகன் ரெட்டி மீது TDP குற்றச்சாட்டு|video

முன்பு திருப்பதி கோயிலில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று தற்போது ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியின் பொது செயலாளர் நாரா லோகேஷ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்த... மேலும் பார்க்க

TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" - ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து மாநாடு, அறிக்கைகள் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை `உங்க விஜய் நா... மேலும் பார்க்க

'யோவ் இங்க பாரு'- கடுப்பான திருச்சி சிவா; மன்னிப்பு கேட்ட செந்தில் பாலாஜி - வைரலாகும் வீடியோ

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.20) அன்று திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற... மேலும் பார்க்க

பாமக: `கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில்தான் நடக்கும்!’ – எம்.எல்.ஏ அருள் சொல்வதென்ன ?

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில... மேலும் பார்க்க