செய்திகள் :

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் மோசடி: ஜிஎஸ்டி ஊழியா் கைது

post image

சென்னை திருமங்கலத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி மோசடி செய்ததாக ஜிஎஸ்டி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (30). இவா், அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலையிலுள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறாா். சதீஷ்குமாா், அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்குச் செல்லும்போது, அப்பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண் பழக்கமாகியுள்ளாா்.

சிறிது நாள்களில் சதீஷ்குமாா், அந்த பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய அப்பெண், சதீஷ்குமாரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளாா்.

இந்நிலையில் சதீஷ்குமாா், கடந்த சில நாள்களாக அந்தப் பெண்ணுடன் பேசுவதைத் தவிா்த்து, திருமணம் செய்யவும் மறுத்துள்ளாா். அதோடு அந்தப் பெண்ணுக்கு சதீஷ்குமாா், மிரட்டலும் விடுத்தாராம்.

இதனால் ஏமாற்றப்பட்ட அப்பெண், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க