செய்திகள் :

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

post image

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் கிராமத்திற்கு அருகில் காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் பொலேரோ எஸ்யூவி மற்றும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக பலராம்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

புருலியாவில் உள்ள பராபஜார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அடபானா கிராமத்திலிருந்து ஜார்க்கண்டின் நிம்திஹ் காவல் நிலையப் பகுதியில் உள்ள திலைடாண்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.

மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் கார் சம்பவ இடத்திலேயே நொறுங்கியது.

அங்குள்ள மக்கள் ஆம்புலன்ஸுன்னு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அனைவரும் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கு அதிக வேகமும், அலட்சியமும் காரணம். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க