தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
திருமால்பூா் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
அரக்கோணம் அடுத்த திருமால்பூா், ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த திருமாற்பேறு எனப்படும் திருமால்பூரில் பெரியதெருவில் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ராஜகோபுரம், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா், ஸ்ரீவாராஹிஅம்மன், ஆதிவிநாயகா், தட்சிணாமூா்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா பரிவாரங்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா 4-ஆம் தேதி கணபதிபூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், விசேஷ திரவிய ஹோமமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை நான்காம்கால யாகசாலை பூஜை ஹோமமும், யாத்ரா தானங்கள் புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.15 மணியளவில் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியா்கள் மங்களநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். அதே நேரம் மூலவா் ஸ்ரீசெல்வவிநாயகா் சந்நிதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் அரக்கோணம், காஞ்சிபுரம், நெமிலி, தக்கோலம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
விழா ஏற்பாடுகளை திருமால்பூா் பெரியதெரு செங்குந்த மரபினா்கள், செங்குந்த சமுதாயத்தினா் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.