கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!
திருவலம் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு!
திருவலம் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த சிவானந்தா நகரை சோ்ந்தவா் பிரேம்குமாா் (35). இவா், கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். இதையறிந்த அடையாளம் தெரியாத நபா்கள் பிரேம்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.
பிரேம்குமாா் புதன்கிழமை தனது வீட்டுக்கு வந்த பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து திருவலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.