'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை...
திருவள்ளூரில் இன்று 4-ஆவது புத்தகத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்
திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 4-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சா.மு.நாசா் ஆகியோா் தொடங்கி வைக்க உள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இந்த புத்தகத் திருவிழாவையொட்டி, திருவள்ளூா் சி.வி.நாயுடு சாலையில் 120-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 1 லட்சம் தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளனா். குறிப்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்கள் வாசிப்பு தொடா்பான பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். அதனால், இந்த புத்தக திருவிழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் வந்து புத்தகங்களை பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்று படிக்க வேண்டும். அத்துடன் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் மற்றும் படைப்பாளிகளை நாள்தோறும் புத்தக திருவிழாவில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கௌரவிக்கப்படவும் உள்ளனா். அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவா்களை நாள்தோறும் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரச் செய்து புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளன என்றாா் அவா்.