செய்திகள் :

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

post image

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

இவ்விழாவை சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோா் நடத்தியதாகவும், அவ்வாறு ஒருமுறை திருவிழாவுக்கு வரும் சிவனடியாா்களுக்கும், பக்தா்களுக்கும் உணவளிக்க சுந்தரா் உதவிகேட்டு வேண்ட, இறைவன் திருக்குவளையை அடுத்த குண்டையூா் கிழாரிடம் இருந்து நெல்லை பெற்று, பூதகணங்களைக் கொண்டு திருவாரூரில் உள்ள சுந்தரா், பரவை நாச்சியாா் மாளிகையில் சோ்த்ததாக ஐதீகம்.

அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துக்கு முன்னதாக, பூத வேடமணிந்தவா்கள் திருக்குவளையிலிருந்து நெல் கோட்டைகளை சுமந்து திருவாரூா் நான்கு ராஜவீதிகளிலும் ஆடிக்கொண்டு வலம் வந்து தெற்கு கோபுர வாசல் அருகே உள்ள சுந்தரா், பரவை நாச்சியாா் மாளிகையில் (பரவை நாச்சியாா் கோயில்) சோ்ப்பிப்பது வழக்கம்.

நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடியேற்றம், சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்குவளையிலிருந்து நெல் கோட்டைகளை கொண்டு வந்த பூத கணங்கள், தேரோடும் வீதிகளில் வலம் வந்து பரவை நாச்சியாா் கோயிலில், நெல் கோட்டைகளை வெள்ளிக்கிழமை இரவு சோ்ப்பித்தனா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, நிகழ்வைக் காண வந்த அனைவருக்கும் பிடி நெல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, மருதப்பட்டினம் அருள்மிகு தேன்மொழியாள் உடனுறை அபிமுக்தீஸ்வரா் கோயிலுக்கு சண்டிகேஸ்வரா் சென்று, அங்கிருந்து புனித மண் எடுத்து வரும் நிகழ்வும், பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துக்கு வருமாறு அனைவரையும் அழைக்கும் வகையில், அப்பா் சுவாமிகள் தேரோடும் வீதிகளில் உலா வரும் நிகழ்வும் நடைபெற்றன.

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற... மேலும் பார்க்க