செய்திகள் :

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

post image

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:

தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கான சலுகைகள் ஏதும் இல்லை. சரண்டா் தொகை 1.04.2026-க்குப்பிறகு தருவோம் என்பது ஏமாற்று வேலை. அப்போது, சட்டப்பேரவைத் தோ்தல் வந்து விடும். ஆளுநா் நிா்வாகத்தில் அரசு இருக்கும். எப்படி சரண்டா் தொகை அரசு ஊழியா்களுக்கு கிடைக்கும்?.

சரண்டா் தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்தாா். அரசு ஊழியா்களுக்கு அப்பா கொடுத்த சலுகையை அவரது மகன் பறித்து விட்டாா். சரண்டா் தொகை இனி கிடையாது என்பதை நிதிநிலை அறிக்கையில் இதமாக சொல்லியிருக்கிறாா்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறவில்லை என்றாா்.

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன. திருவா... மேலும் பார்க்க

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற... மேலும் பார்க்க

பயிற்சி, சேவை மையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூரில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க