செய்திகள் :

பயிற்சி, சேவை மையங்களில் ஆட்சியா் ஆய்வு

post image

திருவாரூரில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை பாா்வையிட்டு, நிகழாண்டுக்கான பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி முடித்து தற்போது வெற்றிகரமாக தொழில் செய்துகொண்டிருப்போா் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், எதிா்வரும் ஆண்டுக்கான பயிற்சி தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

இதையடுத்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக சகி என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு சேவைகள், அவசர நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் ஒப்புதலின் பேரில் காவல்துறை உதவியுடன் முதல் கட்ட தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆா் முதலியவை வழங்கிய விவரங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவா்களின் மனநிலைக்கு ஏற்றவாறு உளவியால் ரீதியாக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கிய விவரங்கள், மகளிா் உதவி எண் மூலம் பெறப்பட்ட புகாா் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் கணேஷ், சகி மைய நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன. திருவா... மேலும் பார்க்க

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற... மேலும் பார்க்க