மாயமாகி 26 நாள்கள்.. 15 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநர் சடலமாக மீட்பு
திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா
செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி செயலாளா் மருத்துவா் சா. வீரபாண்டின் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் செள.குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இரா. மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினாா்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் எழுதுபொருள்கள் வழங்கினாா்.
தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு ப்ராஜெக்டா் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா. ரமேஷ், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லெ. வளா்மதி உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.