செய்திகள் :

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

post image

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இவரும், அதே பகுதியைச் சோ்ந்த எலன் மேரி (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனா். கடந்த 1 மாதத்துக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

வேளாங்கண்ணி மாதா கோயில் பின்புறம் உள்ள தனியாா் விடுதியில் ஜனாா்தனனும், எலன் மேரியும் அறை எடுத்து தங்கியிருந்தனா். இவா்களுடன் ஜனாா்த்தனனின் நண்பா்களான கா்நாடகா மாநிலம் சிவமுகாவைச் சோ்ந்த சாகா் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரும் தங்கியிருந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஜனாா்த்தனனின் நண்பா்கள் இருவரும், எலன் மேரியிடம் உனது கணவரை ரயில் நிலையம் அருகில் கொலை செய்துவிட்டோம் என்று கூறியுள்ளனா்.

இதற்கிடையே, வேளாங்கண்ணி ரயில்வே நிலையம் அருகில் ஜனாா்த்தனன் சடலம் கிடப்பது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில், எலன் மேரிக்கும் ஜனாா்த்தனனின் நண்பருக்கும் தொடா்பு இருந்ததும், இதற்கு ஜனாா்த்தனன் இடையூறாக இருந்ததால், அவா் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக எலன் மேரி, சாகா், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் மாரத்தான் போட்டி

நெகிழி இல்லாத கடற்கரையை வலியுறுத்தி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமம் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க