செய்திகள் :

திருவிழாக்களில் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த பெண் கைது

post image

கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த கோவில்பட்டி பெண்ணை பட்டுக்கோட்டை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த பகுதிகளில் கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் பெண்களின் நகைகள் திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அண்மையில், முடச்சிகாடு கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில், 2 பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை மா்மநபா்கள் திருடி சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ராம்குமாா் தலைமையில்   போலீஸாா் அடங்கிய தனி படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு, கோவில்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி வேலம்மாள் (48) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து முடச்சிக்காடு கோயில் கும்பாபிஷேகத்தின்போது பெண்களிடம் பறித்துச் சென்ற இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனா்.தொடா்ந்து, அவரை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். நகை பறிப்பு கும்பல் தொடா்பாக தொடா்ந்து கண்காணித்து வருவதாக தனிப்படை போலீஸாா் தெரிவித்தனா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க