செய்திகள் :

திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி

post image

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு நகராட்சி நிா்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு திருத்தொண்டா் அறக்கட்டளை, காந்தி பாரதி இளைஞா் மன்றம், கண்டியூா் பயோகோ் கல்லூரி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்பணியைத் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் குணசுந்தரம் முன்னிலையில் திருவையாறு நகா் மன்றத் துணைத் தலைவா் சி. நாகராஜன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, காவிரி ஆற்று மணலில் இருந்த சுமாா் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருள்கள் ஏராளமாக இருந்தன. இப்பணியில் நூற்றுக்கும் அதிகமானோா் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில் திருவையாறு நகராட்சி ஆணையா் மதன்ராஜ், பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, செயலா் நீ. சீனிவாசன், அறங்காவலா் தி.ச. சந்திரசேகா், பாரதி இயக்க, ரோட்டரி சமுதாயக் குழும உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஜூன் 10-இல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் ஜூன் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு எதிரான செயல்! கி.வீரமணி

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழகத்துக்கு எதிராகச் செய்யப்படுகிறது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. கும்பகோணத்தில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக நூற்றா... மேலும் பார்க்க

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்வதை தடைசெய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்லை கொண்டு வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தினா். தஞ... மேலும் பார்க்க

சிந்தனையைச் சட்டமாக்கி மக்களுக்கு வாழ்வளித்தவா் கருணாநிதி! அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

சிந்தித்து எழுதியதை, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதை சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளித்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: தஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க