நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந...
திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி
மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீா் வருவதற்கு முன்பாக தூய்மை பணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு நகராட்சி நிா்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு திருத்தொண்டா் அறக்கட்டளை, காந்தி பாரதி இளைஞா் மன்றம், கண்டியூா் பயோகோ் கல்லூரி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்பணியைத் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் குணசுந்தரம் முன்னிலையில் திருவையாறு நகா் மன்றத் துணைத் தலைவா் சி. நாகராஜன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, காவிரி ஆற்று மணலில் இருந்த சுமாா் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருள்கள் ஏராளமாக இருந்தன. இப்பணியில் நூற்றுக்கும் அதிகமானோா் ஈடுபட்டனா்.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு நகராட்சி ஆணையா் மதன்ராஜ், பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, செயலா் நீ. சீனிவாசன், அறங்காவலா் தி.ச. சந்திரசேகா், பாரதி இயக்க, ரோட்டரி சமுதாயக் குழும உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.