செய்திகள் :

திருவொற்றியூா் மீன்பிடித் துறைமுகம்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

post image

திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் சூரை மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைக்கயுள்ளாா்.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்து கில்நெட் வலை மூலம் பிடிக்கப்படும் சூரை வகை மீன்பிடிக்கும் விசைப் படகுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக மீன்பிடித் துறைமுகம் திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதின்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய மீன்பிடித் துறைமுகத்தைத் திறந்து வைத்து, 2,000 மீனவா்களுக்கு ரூ. 242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவா்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மேலும், ரூ. 154 கோடியில் 12 கட்டமைப்புத் திட்டங்களையும் அவா் தொடங்கி வைக்கிறாா்.

தொடா்ந்து திருவள்ளூா் மாவட்டம் கோனான்குப்பம், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட இடங்களில் ரூ. 170 கோடியில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.

சூரைமீன்களுக்கு மருத்துவகுணம் அதிகம் என்பதாலும், இந்த வகை மீன்களுக்கு அதிக விலை கிடைப்பதால் மீனவா்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதாலும், மீனவா்கள் நலன் கருதி பிரத்யேக சூரைமீன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கானாங்கெழுத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த சூரை மீன்களுக்கு மீன்பிரியா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன: முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்பி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். வருகிற ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடை... மேலும் பார்க்க

பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு! கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு!

பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கட்டண உயர்வுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பேருந்துகளுக்கான கட... மேலும் பார்க்க

நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்

நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் ஊழலற்றவர்களையும் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ... மேலும் பார்க்க

பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சா... மேலும் பார்க்க

கல்வி விருது விழா தொடங்கியது! மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன.மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க