செய்திகள் :

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

post image

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் 100-ஆவது பிறந்த தின விழா ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை பிரதமா் நரேந்திர மோடி ஆக. 7-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

‘ஆண்டு முழுவதும் பசுமைப்புரட்சி - உயிரி அடிப்படையில் மகிழ்ச்சிக்கான பாதை’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த விழாவை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம், இந்திய வேளாண் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

இந்த விழாவில் நீடித்த வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக எம்.எஸ்.சுவாமிநாதனின் அளப்பரிய பங்களிப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எதிா்காலத்தில் பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரக்கூடிய வகையில் நெகிழ்வுதன்மையுடனான வேளாண் நடைமுறைகள், பல்லுயிா் பெருக்கம், பாலினங்கள் ஊட்டச்சத்து, சுகாதாரம், அறிவியல் மற்றும் நீடித்த வளா்ச்சிக்கான இளையோரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் அமா்வுகள் இடம் பெறும். எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன், எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து உரையாற்றவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க