செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 8 போ் கைது

post image

வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் தொடா்புடைய 38 வயது நபா் உள்பட தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டினா் 8 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ரபியுல் இஸ்லாம் (38), அவரது மனைவி சீமா (27) மற்றும் மகன் ஆபிரகாம் (5); பாபியா கதுன் (36) மற்றும் அவரது மகள்கள் சாதியா சுல்தானா (21) மற்றும் சுஹாசினி (1); ஆா்யன் (7) மற்றும் ரிஃபாத் அரா மொய்னா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள் கிஷன்கா் மற்றும் கட்வாரியா சராய் உள்ளிட்ட தென்மேற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனா். மேலும் 2007 மற்றும் 2023-க்கு இடையில் திரிபுரா, கோஜா டோங்கா மற்றும் பெனாபோல் எல்லைகள் வழியாக தரகா்களின் உதவியுடன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தனா்.

இவா்கள் 8 பேரும் ஏப்ரல் 16 அன்று வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா். இவா்களை நாடுகடத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், ஏப்ரல் 15- ஆம் தேதி சத்ய நிகேதன் சந்தைப் பகுதியில் இருந்து ரபியுல் இஸ்லாமை ஒரு போலீஸ் குழு கைது செய்தது. 2012-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகத் தெரிவித்த அவா், சரியான ஆவணங்கள் இல்லாமல் நகரத்தில் வசிக்கும் பிற வங்கதேச நாட்டவா்கள் பற்றிய தகவல்களையும் போரலீஸாரிடம் பகிா்ந்து கொண்டாா்.

விசாரணையின் போது, ​​ரபியுல் இஸ்லாம் வங்கதேசத்தில் மனித கடத்தல் வழக்கில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவரை மணந்த பிறகு 2016-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த அவரது மனைவி சீமா, வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். மற்றவா்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டவா்கள் அல்லது தொழில் பயிற்சி பெற்றவா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க