செய்திகள் :

தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

post image

சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், தலையில் காயமடைந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்கான் (31) என்பது அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.

சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

55க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பிறகு, ஆனந்த் பர்பத் பகுதியில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட மோனு (24) மற்றும் யோகேந்தர் (33) ஆகியோரை மார்ச் 18 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மல்கானை இருவரும் கொன்றதை ஒப்புக்கொண்டனர் என்று போலீஸார் கூறினர்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மல்கானுடன் இணைந்து ஓவியர்களாக வேலை செய்ததாகவும், சம்பளம் வழங்காததால் ஆத்திரமடைந்த இருவரும், மல்கானை செங்கலால் தாக்கியதில் பலியானார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு

கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது ம... மேலும் பார்க்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்... மேலும் பார்க்க

உ.பி. : மாணவியர் விடுதியில் தீ விபத்து; சிறுமி காயம்

கிரேட்டர் நொய்டாவில் மாணவியர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுமி காயமடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் க... மேலும் பார்க்க

சுதந்திரத்தைப் பாதுகாத்த நமது தியாகிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்: பிரியங்கா

தியாகிகள் செய்த தியாகங்கள் இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்க... மேலும் பார்க்க

காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்: ஏப்ரல் 19-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து இதனை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப... மேலும் பார்க்க