செய்திகள் :

தில்லியில் தொடரும் நடவடிக்கை! சட்டவிரோதமாக குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

post image

தில்லியில் இருவேறு நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 3 குழந்தைகள் உள்பட 9 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லியின் நரேலா பகுதியில், கடந்த மே 25 ஆம் தேதியன்று அம்மாநில காவல் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக அங்கு வசித்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் குடியேறிய அந்நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் நால்வரும் வங்கதேசத்தின் குதிகிராமம் மற்றும் நாகேஷ்வரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஹஃபிசுல் (வயது 19), மொமினுல் (21), ஷமிம் (22) மற்றும் இனாமுல் (38) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் குழந்தைகளாக இருந்தபோதே தங்களது பெற்றோர்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் தற்போது அவர்களது பெற்றோர்கள் மட்டும் வங்கதேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கிழக்கு மாவட்டத்தில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தின் ஷிமுலாபுரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஷாஹீன் (30), அவரது மனைவி ருஜீனா (26) எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களது 14,9 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தினர் அனைவரையும் அவர்களது தாயகத்துக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரையில், கிழக்கு மாவட்டத்திலிருந்து மட்டும் 20 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு அவர்களது தாயகத்துக்கே நாடுகடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கும் கரோனா! ஜார்க்கண்டில் புதியதாக 2 பாதிப்புகள் உறுதி!

மூட்டை முடிச்சுகளுடன்.. தில்லி மதராசி முகாம் மக்கள் கண்ணீர்!

கடந்த 60 ஆண்டுகாலமாக இதுதான் எங்கள் வீடு, ஆனால், திடீரென எப்படி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறுவது என்று 67 வயது பெண் ஒருவர் கூறி கண்ணீர் விடுகிறார்.தனது சிறு வயதில், குடும்பத்துடன் இந்த ம... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வய... மேலும் பார்க்க

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க