செய்திகள் :

தில்லியில் நிலநடுக்கத்தால் பூங்காவில் வேரோடு சாய்ந்த மரம்

post image

தலைநகரில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் தௌலா குவானில் உள்ள ஜீல் பூங்காவில் 20-25 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

நிலநடுக்கத்தையடுத்து பூங்காவில் ஏற்பட்ட சேதத்தை அதன் பராமரிப்பாளர்கள் உறுதி செய்தனர். ஏஎன்ஐயிடம் பேசிய காப்பாளர் மஹாவீர், "இன்று காலை 9 மணிக்கு பணிக்கு வந்தேன். வேரோடு சாய்ந்த மரத்தைப் பார்த்தேன். இது 20-25 ஆண்டுகள் பழமையான மரம். இங்கு காற்று, இடியுடன் கூடிய மழை என எதுவும் இல்லாததால் இது நிலநடுக்கத்தால் நடந்திருக்க வேண்டும்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பூங்காவை சுற்றி பார்த்தபோது, ​​மரம் விழுந்ததை கண்டுபிடித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஜீல் பூங்காவின் மற்றொரு காப்பாளர் ஜான்கி தேவி கூறுகையில், "வேரோடு சாய்ந்த மரத்தைத் தவிர வேறு எந்த சேதமும் இல்லை.. அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மிகவும் சக்திவாய்ந்த நடுக்கம் ஏற்பட்டது.

அதன் காரணமாக மரம் வேரோடு பிடுங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார். தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 5:36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

தில்லியை வழிநடத்த பாஜகவில் ஆளில்லை: அதிஷி

இந்த நிலநடுக்கம், புது தில்லியை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

ம.பி., பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பிரதமா் இன்றுமுதல் 3 நாள்கள் பயணம்

மத்திய பிரதேசம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இது தொடா்பாக பிரதமா் அலுவல... மேலும் பார்க்க

இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

இணையதளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளை இந்தியா எப்போது வெளியேற்றும்? குடியரசு துணைத் தலைவா் தன்கா்

இந்தியாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அவா்களின் நாட்டுக்கு எப்போது அனுப்பப்படுவா் என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியருக்கும் எழ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மகாராஷ்டிர ம... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவா்களை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. அவா்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க