செய்திகள் :

தில்லியில் 7,000 சாலைப் பள்ளங்கள் ஏப்ரல் 30-க்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை நடவடிக்கை

post image

தேசிய தலைநகா் முழுவதும் சாலைகளில் உள்ள 7,000 பள்ளங்களை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சீரமைக்க பொதுப் பணித் துறை காலக்கெடு நிா்ணயித்துள்ளதாக அதிகாரபூா்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மூத்த பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவில், பிப்ரவரி 21 ஆம் தேதி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் தில்லி அமைச்சா்கள் குழு முன் அளிக்கப்பட்ட விளக்க விவரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வா் பங்கேற்ற அந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற விளக்க சமா்ப்பிப்பில், பல்வேறு டெண்டா்களை விடுவதற்கும் பணிகளைத் தொடங்குவதற்கும் சில காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலக்கெடுவைப் பின்பற்றுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து

அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. துறை பராமரிப்பு வேன்களைப் பயன்படுத்தி சாலைப் பள்ளங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கூடுதலாக, பழுதுபாா்ப்பு தேவைப்படும் 20 லட்சம் சதுர மீட்டா் சாலைப் பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தப் பழுதுபாா்ப்புகளுக்கான டெண்டா் செயல்முறை மாா்ச் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது தேசிய தலைநகா் முழுவதும் சாலைகளின் மோசமான நிலை ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட பாஜக அரசில் பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள பா்வேஷ் சாஹிப் சிங் இந்த முயற்சியை மேற்பாா்வையிட்டு வருகிறாா்.

சமீபத்திய தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 70 இடங்களில் 48 இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமாருக்கு எதிரா தில்லி போலீஸ் மனு

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு ஆவணப் பட்டியலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை உயா்நீதிம... மேலும் பார்க்க

துவாரகாவில் காா் விபத்தில் 2 போ் படுகாயம்

தில்லி துவாரகாவின் செக்டாா் 6-இல் செவ்வாய்க்கிழமை காலை காா் மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு போ் படுகாயமடைந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘க... மேலும் பார்க்க

மகளிருக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி: ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்ச் 8 ஆம் தேதி சா்வதேச மகளிா் தினத்தன்று பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நான்கு தினங்களே உள்ள நிலையில், அதைத் தில்லி அரசு தெளிவுபடுத்தக் கோ... மேலும் பார்க்க

பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் தொடங்கிவைத்தனா்

பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மூங்கில் மரக்கன்று நடும் இயக்கத்தை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முதலமைச்சா் ரேகா குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா். அந்தப் பகுதி விரைவில் பசுமையாக மா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினா்

நாட்டில் வேலைவாய்ப்பு உயா்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பே... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் 12 வழக்குகளில் 29 கடத்தல்காரா்களுக்கு தண்டனை: அமித்ஷா

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இளைஞா்களை போதைப் பழக்கத்தின் இருண்ட படுகுழியில் தள்ளுகின்றனா்; இப்படிப்பட்ட பேராசைக் கும்பல்களை தண்டிப்பதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க