செய்திகள் :

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் 18 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்ட விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிக்க | ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

இதுபோன்ற துயர சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அதிகப்படுத்தக் கோரி தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், பிப். 15 அன்று புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான விடியோக்களின் 285 இணைப்புகளை எக்ஸ் தளத்திலிருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(பி) இன் கீழ் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் தகவல்களை நேரடியாக நீக்குமாறு உத்தரவிடுவதற்கு ரயில்வே அமைச்சகம் அதன் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநருக்கு (ரயில்வே வாரியம்) அதிகாரம் அளித்து கடந்த டிசம்பர் 24 அன்று ஆணை வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுபோன்ற கோரிக்கைகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரிவு 69ஏ-ன் கீழ் தடுப்புக் குழுவின் மூலம் அனுப்பப்பட்டன.

இதையும் படிக்க | கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

பலியான நபர்களைக் குறிப்பிடும் தொந்தரவு செய்யக்கூடிய பதிவுகளாக அவற்றைக் குறிப்பிட்டு, பல்வேறு பக்கங்களில் பதிவிடப்பட்ட பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகம் பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத விளம்பரங்கள், ஒப்புதல்கள், விளம்பர உள்ளடக்கம் போன்றவை வெளியிடப்பட்ட இணையப் பக்கங்கள், கணக்குகள் போன்றவற்றை அகற்றவும் முடக்கவும் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க