செய்திகள் :

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

post image

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது.

‘தேசியத் தலைநகரம் முழுவதும் தண்ணீா் பற்றாக்குறை உள்ளது. தியோலி, அம்பேத்கா் நகா், மாடல் டவுன், ஹரி நகா் ஆகிய இடங்களிலும் தண்ணீா் பிரச்னை உள்ளது. மக்கள் இந்த நிலைமை குறித்து எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆனால், அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று ஆம் ஆத்மியின் தில்லி மாநில ஒருங்கிணைப்பாளா் சௌரவ் பரத்வாஜ் ஒரு செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்தாா்.

இந்தப் பிரச்னையை தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பிய சௌரவ் பரத்வாஜ், ‘பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு உள்ளது. நான் கேட்க விரும்புவது அரசால் எத்தனை குழாய் கிணறுகள் நிறுவப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் நிதியைப் பயன்படுத்தி நிறுவிய குழாய் கிணறுகளைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால், அரசால் நிறுவப்பட்ட குழாய் கிணறுகளைப் பற்றி நான் பேசுகிறேன்’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ‘நான்கு எஞ்சின்’ என்ற வாா்த்தையை பாஜகவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனா். இது மத்திய அரசு, தில்லி அரசு, எம்சிடி, துணை நிலை ஆளுநா் அலுவலகத்தைக் குறிக்கிறது.

‘நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, துணை நிலை ஆளுநரும் பாஜகவும் நீா் மேலாண்மையில் சிக்கல் இருப்பதாகக் கூறினா். அரசு நீா் மேலாண்மையை துணை நிலை ஆளுநரால் அடைய முடியவில்லையா?’ என்று அவா் கேட்டாா்.

இதேபோன்ற கருத்துகளை எதிரொலிக்கும் வகையில், முன்னாள் கட்சி எம்.எல்.ஏ அகிலேஷ் பதி திரிபாதி, நான்கு எஞ்சின் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறினாா். ஆம் ஆத்மி கட்சியின் கூற்றுகளுக்கு ஆளும் பாஜகவிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் இல்லை.

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட போதைப் பொருள்களை எடுத்துச் சென்ற காவல் அதிகாரி இடமாற்றம்; 3 ஊழியா்கள் இடைநீக்கம்

மீட்கப்பட்ட போதைப் பொருள்களை முறைகேடாக எடுத்துச் சென்றதாக காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், மூன்று ஊழியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவ... மேலும் பார்க்க