செய்திகள் :

தில்லி பேரவை: அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

post image

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் விஜயேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும்ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினார்கள்.

எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 11 எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பாஜக விளக்கம்

தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பாஜகவினர் நேற்று விளக்கமளித்திருந்தனர்.

முந்தைய ஆட்சியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் தற்போது முதல்வர் இருக்கைக்கு வலப்புறச் சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தில்லி பேரவைத் தலைவராக விஜேந்தர் குப்தா தேர்வு!

தில்லி சட்டப்பேரவையின் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ விஜயேந்தர் குப்தா திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக... மேலும் பார்க்க

தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!

தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் அதிஷி!

தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் முதல்வா் அதிஷியை கட்சி எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுத்தனா். இதன் மூலம் அதிஷி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் . த... மேலும் பார்க்க

புற்றுநோய் மையங்கள் உள்கட்டமைப்பிற்கான ஆய்வு தொடக்கம்: மத்திய அரசு தகவல்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை... மேலும் பார்க்க

நொய்டா: திருமண ஊா்வல துப்பாக்கிச்சூட்டில் குழந்தை இறந்த சம்பவத்தில் முக்கிய நபா் கைது

சில நாள்களுக்கு முன்பு நொய்டாவில் நடந்த திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூட்டின் போது இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவம் தொடா்பாக முக்கிய நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க

குரிகிராம் அருகே கிராமத்தில் அம்பேத்கா் சிலை சேதப்பட்டதால் பதற்றம்

குருகிராம் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலா கிராமத்தில் அம்பேத்கா் காலனியில் உள்ள பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சில மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் நிலவுவதாக போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க