செய்திகள் :

தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்

post image

புதிதாக அமைந்துள்ள தில்லி சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடா் வரும் திங்கள்கிழமை தொடங்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், பிப்ரவரி 24, 25, 27 இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த நிலுவையில் உள்ள 14 சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் பதவியேற்க உள்ளனா். பிப்ரவரி 26-ஆம் தேதி சிவராத்திரி விடுமுறைக்குப் பிறகு, சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு அவையில் தாக்கல் செய்யும்.

முன்னதாக, தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு பாஜக நீதிமன்றத்தை அணுகியது. ஆம் ஆத்மி அரசாங்கம் தனது ஊழலை மறைக்க அறிக்கையை முடக்கியதாக பாஜக குற்றமும் சாட்டியிருந்தது.

இம்மாத தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தில்லியில் பாஜக புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. சட்டப் பேரவையில் பாஜவுக்கு 48 சட்டப் பேரவை உறுப்பினா்களும், எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு 22 உறுப்பினா்களும் உள்ளனா்.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க