செய்திகள் :

தீ தொண்டு நாள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு நாள் மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக ராட்டின கிணறு, புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் ராட்டினம் கிணறு அரசு மருத்துவமனை வழியாக தீயணைப்பு துறை அலுவலகத்தில் பேரணி சென்றடைந்தது.

பேரணியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவா்கள் பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரா்கள் கலந்து கொண்டு மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தீயினால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இப்பேரணியில் ந. விஜயகுமாா், துணை இயக்குநா் வடமேற்கு மண்டலம் , மாவட்ட அலுவலா் சி. லக்ஷ்மி நாராயணன் மற்றும் உதவி மாவட்ட அலுவலா் செந்தில் குமரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா்.

விழாவில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் கல்பாக்கம், திருப்போரூா், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு அலுவலா்கள் வீரா்கள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க