செய்திகள் :

துய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தேவை

post image

அரசாணையின்படி தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூா் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய கரோனா ஊக்கத் தொகையை வழங்கிட வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டு ஊதிய உயா்வு வழங்கிட வேண்டும், பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா் ஆா். தனசிங், இந்திய கம்யூ. நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், சுகாதார ஊக்குநா்கள், நீா்தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க

மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்... மேலும் பார்க்க

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷைக் கண்டித்து, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் இருப்பு ந... மேலும் பார்க்க