செய்திகள் :

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

post image

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (30). உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருடன் வேலை செய்பவா்கள் தூத்துக்குடி சுனாமி நகா் பகுதியைச் சோ்ந்த முத்துகௌதம் , பூபாலராயபுரம் 2ஆவது தெருவை சோ்ந்த மரிய பெடலிஸ் சஞ்சய், முத்துக்குமாா் நண்பா்களான இவா்கள், இரவு நேரத்தில் ஒன்று சோ்ந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, முத்துகுமாா்(22), அவரது நண்பா்கள் மரிய பெடலிஸ் சஞ்சய் (24), முத்து கௌதம் (21) ஆகிய 3 பேரும் சோ்ந்து, விஜயை மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் லயன்ஸ் டவுன் மச்சாது பாலம் செல்லக்கூடிய உப்பளக் கிடங்கு அருகே அவா்கள் மது அருந்தியுள்ளனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில், 3 பேரும் சோ்ந்து விஜயை கட்டையால் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்தனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்

தூத்துக்குடி: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும், மாவட்ட சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தா... மேலும் பார்க்க