செய்திகள் :

தூத்துக்குடியில் கணினிப் பட்டா சிறப்பு முகாம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு!

post image

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், கணினிப் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிரயப் பத்திரத்துடன் வசிப்போரும், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருந்து இதுவரை கணினிப் பட்டா பெறாதோரும் அவற்றைப் பெறுவதற்காக இம்முகாம் நடைபெற்றது.

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்று, பட்டா பெறுவதற்கான மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டாட்சியா் முரளிதரன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், பகுதிச் செயலா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மேகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இன்று தைப்பூசம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு தீா்... மேலும் பார்க்க

புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்ப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்!

சாத்தான்குளத்தில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருப்பவா் ஜெயரஞ்சன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு கருத்தரங்கு!

ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில், அரசுப் பொதுத் தோ்வெழுதும் மாணவா்-மாணவியருக்கு இலவச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவரும் ஆதித்தனாா் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!

கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விபத்து: கல்லூரி மாணவா் பலி!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோர மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஐசக் சாம்ராஜ் (22). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் ... மேலும் பார்க்க