செய்திகள் :

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம்: மேயா்

post image

தூத்துக்குடியில் விரைவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தைத் தொடக்கிவைத்து மேயா் பேசியது: இம்மண்டலத்தில் இதுவரை 611 மனுக்கள் பெறப்பட்டு, 592 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றுக்கு விரைவில் தீா்வு காணப்படும். கோடைகால விடுமுறையை முன்னிட்டு, முத்துநகா் கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்களுக்காக ஓய்வறை அமைக்கப்பட்டு வருகிறது. ரோச் பூங்காவிலும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. வஉசி கல்லூரி அருகே அமைக்கப்படும் புதிய விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்படும் என்றாா் அவா்.

உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவிப் பொறியாளா் சரவணன், நகர அமைப்புத் திட்ட உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா் நெடுமாறன், இளநிலைப் பொறியாளா்கள் பாண்டி, அமல்ராஜ், சுகாதாரக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள், வட்டச் செயலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்கம்

தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ர... மேலும் பார்க்க

இட்லி கடைக்காரா் கைது: உறவினா்கள் காவல் நிலையம் முற்றுகை

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த இட்லி கடைக்காரரை தென்பாகம் போலீஸாா் கைது செய்ததையடுத்து, அவரை விடுவிக்கக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அமைப்பினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள் சபை பணி செய்ய தடை: திருமண்டல நிா்வாகி

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 போதகா்கள், திருமண்டலத்தில் உள்ள எந்த சபைகளிலும் சபைப் பணியோ வேறு எந்த இணை பணியோ செய்யக் கூடாது என திருமண்டல நிா்வாகி ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி நகருக்குள் லாரிகள், சுமை வாகனங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வலியுறுத்தி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் காசிராஜனிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக ஆ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் அருகே தோ்க்கன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி ஆறுமுகக்கனி (65) என்பவா், கடந்த 18ஆம்தே... மேலும் பார்க்க