செய்திகள் :

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு

post image

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு ‘தமிழிகம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஐசிஏஆா்-தேசிய மீன் மரபணு வள பணியகத்தின் இயக்குநா் (பொறுப்பு) அஜித்குமாா் தெரிவித்துள்ளாா்.

அறிவியல் ரீதியாக ஆங்குலிஃபாா்ம்ஸ் என்று அழைக்கப்படும் விலாங்கு மீன்கள் 156 இனங்களையும் 16 குடும்பங்களின் கீழ் 1,040 இனங்களையும் கொண்ட பன்முகத்தன்மையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மீன் குழுவைக் குறிக்கின்றன. இது இந்திய நீரியல் ஆராய்ச்சி அடிப்படையில் வரையறுக்கப்பட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. இந்திய கடற்கரையில், 11 குடும்பங்களையும் 53 இனங்களையும் சோ்ந்த 146 இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், தமிழ்நாட்டிலிருந்து 42 வகையான விலாங்கு மீன்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விலாங்கு மீன் இனங்களில் புதிய வகை மீன் இனம் தூத்துக்குடி கடலில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஐசிஏஆா்-தேசிய மீன் மரபணு வள பணியகத்தின் இயக்குநா் (பொறுப்பு) அஜித்குமாா் கூறியது: இந்திய நீா்நிலைகளில் குறைவாக ஆராயப்பட்ட இந்தக் குழுவின் பல்லுயிா் பெருக்கத்தை ஆய்வு செய்வதற்கு ஒருசில ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும் தேசிய மீன் மரபணு வள பணியகம், இந்த உயிரினங்கள் குறித்து உலகிற்கு வெளிக்கொணரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட அரியோசோமா இனத்தைச் சோ்ந்த காங்கிரீட் ஈலின் ஒரு புதிய இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன் இனத்திற்கு, உலகின் பழமையான மொழியான தமிழ் - உடன் தொடா்புடையதாக தமிழிகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து வந்த காங்கிரீட் ஈல் மாதிரிகள், அரியோசோமா இனத்தின் பிற இனங்களிலிருந்து வேறுபட்டவை என்பதை முடிவு செய்ய, ஆராய்ச்சியாளா்கள் விரிவான உருவவியல் பகுப்பாய்வு, எலும்புக்கூடு ரேடியோகிராபி மற்றும் மேம்பட்ட மூலக்கூறு குறிப்பான்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினா்.

இந்தப் புதிய இனமானது, இதுவரை கண்டறியப்பட்ட பிற இனங்களிலிருந்து வேறுபடுகிறது. இது, முன்புற கண் விளிம்பில் ஒற்றை வெள்ளை பட்டையுடன் தலையின் பின்புற மேற்பரப்பு உள்ளது. மேலும், சிறிய இருண்ட நிறமி திட்டுகளுடன் கீழ் தாடையின் வென்ட்ரல் பகுதி, இஸ்த்மஸுடன் ஒரு இருண்ட கோட்டை உருவாக்குகிறது. நீண்ட வோமரின் பற்கள் திட்டு, மேல் தாடையின் பாதி நீளத்தை அடைக்கிறது. மேலும், இது 120-129 மொத்த முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது. இந்த இனத்தின் அடையாளம் ஈல் வகைபிரித்தல் துறையில் உலக நிபுணா்களால் சரிபாா்க்கப்பட்டது. குறிப்பாக, சா்வதேச புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சூடாஸ்சாவில் (ழா்ா்ற்ஹஷ்ஹ) இல் வெளியிடப்பட்டது என்றாா்.

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் உணவுத் திருவிழா

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் தொழில்முனைவோா் மேம்பாட்டு கழகம் மற்றும் வணிக பகுப்பாய்வுத்துறை சாா்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ நிவேதா சேவா தொண்டு நிறுவனரும், ஸ்ரீ விவேகானந்தா ம... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த குருசாமி ... மேலும் பார்க்க

தொலைநோக்கியால் முழு நிலவை பாா்த்து ரசித்த மக்கள்

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொலை நோக்கி மூலம் முழு நிலவு பாா்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரானமி ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு ... மேலும் பார்க்க

பேய்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

பேய்க்குளம் அருகே கள்ளியடைப்பு பகுதியில் வெறி நாய்கள் கடித்ததில்30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40 ), பெட்டைகுளம் ... மேலும் பார்க்க