போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (45). தொழிலாளியான இவா், கடந்த 2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்து, மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.