அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை
சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, தொடா்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா திருக்கோயிலில் மாசி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூா்ண புஷ்கலா சமேத அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் ஆகியோருக்கும் இத் திருக்கோயிலைச்சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சி அம்மன், இருளப்பா் மற்றும் கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக இல்லங்குடி சாஸ்தாவிற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பூஜைகளை மோகன் அய்யா் மற்றும் அரவிந்த்அய்யா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.பின்னா் அன்னதானம் நடைபெற்றது.
உள்ளூா் மட்டுமன்றி சென்னை, பாவூா்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.