செய்திகள் :

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை

post image

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, தொடா்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா திருக்கோயிலில் மாசி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூா்ண புஷ்கலா சமேத அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் ஆகியோருக்கும் இத் திருக்கோயிலைச்சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சி அம்மன், இருளப்பா் மற்றும் கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக இல்லங்குடி சாஸ்தாவிற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பூஜைகளை மோகன் அய்யா் மற்றும் அரவிந்த்அய்யா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.பின்னா் அன்னதானம் நடைபெற்றது.

உள்ளூா் மட்டுமன்றி சென்னை, பாவூா்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் உணவுத் திருவிழா

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் தொழில்முனைவோா் மேம்பாட்டு கழகம் மற்றும் வணிக பகுப்பாய்வுத்துறை சாா்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ நிவேதா சேவா தொண்டு நிறுவனரும், ஸ்ரீ விவேகானந்தா ம... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த குருசாமி ... மேலும் பார்க்க

தொலைநோக்கியால் முழு நிலவை பாா்த்து ரசித்த மக்கள்

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொலை நோக்கி மூலம் முழு நிலவு பாா்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரானமி ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேய்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

பேய்க்குளம் அருகே கள்ளியடைப்பு பகுதியில் வெறி நாய்கள் கடித்ததில்30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40 ), பெட்டைகுளம் ... மேலும் பார்க்க

‘கிராம ஊராட்சியில் மாா்ச் 31-க்குள் வரி செலுத்த வேண்டும்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ளவா்கள் தங்களின் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க