செய்திகள் :

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், நேற்று (14-ம் தேதி) இரவில் இருவருக்கும் மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுபோதை

வாக்குவாதம் முற்றியதால் முனியசாமி மது பாட்டிலை உடைத்து ராகுல் காந்தியை குத்த முயன்றார். அதைத் தடுக்கும்போது, ராகுல் காந்தி அவரது கையை கடித்ததாகக் கூறப்படுகிறது.

மதுபோதையில் இருந்த முனியசாமி அங்கேயே படுத்து உறங்கினார். ஆத்திரத்தில் இருந்த ராகுல் காந்தி, வீட்டில் இருந்த பிளேடைக் கொண்டு முனியசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர், கையில் காயத்துடன் இருந்த ராகுல்காந்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் வீட்டில் நடந்ததைக் கூறிவிட்டு நேரடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனது தந்தையைக் கொலை செய்துவிட்ட விவரத்தை கூறி சரணடைந்துள்ளார்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முனியசாமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி அதிக மது போதையில் இருந்ததால் போலீஸாரால் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது.

போதை தெளிந்த பிறகுதான் தந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்துக் கேட்க முடியும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இர... மேலும் பார்க்க

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்ச... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில... மேலும் பார்க்க

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெத்தாம்பாளையம... மேலும் பார்க்க

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க