செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

post image

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 5, 6-ஆவது மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ரிப்பன் கட்டடம் அருகே தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் அல்லது மூா் மாா்க்கெட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் கடந்த ஆக. 14-ஆம் தேதி மனு அளித்தனா்.

இந்த மனுவை போலீஸாா் நிராகரித்து விட்டனா். எனவே, அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி உழைப்போா் உரிமை இயக்கத்தின் பொருளாளா் மோகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என கேள்வி எழுப்பினாா்.

பின்னா், இந்த மனுவிற்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள... மேலும் பார்க்க

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சி... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடை... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க