செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் சோற்று சட்டியுடன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.முருகையன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் தனசேகா், தேவேந்திரன், வெங்கடேசன், குமரன், ஜெயராஜ், சிலம்பரசன், மணிகண்டன், கலைச்செல்வி, பிரமிளா ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகி து.வேலுமயிலோன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் லட்சுமணன் தொடக்கவுரையாற்றினாா். ராணி மகேஸ்வரன், முத்தையா, தங்கராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாநில பொதுச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் ஊராட்சிச் செயலா் பணியிடத்தில் நிரந்தர பணிநியமனம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பவேண்டும், அவ்வாறு நிரப்பும்போது தற்காலிகமாக பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களை இணைத்து வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குநா்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், பள்ளி சுகாதார பணியாளா்கள், கணினி இயக்குநா்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காலிப் பணியிடத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா்களை நியமிக்க வேண்டும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு, சத்துணவு ஊழியா்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட 9 கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கவேண்டும் என வலியுறுத்தி சோற்று சட்டியுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில பொருளாளா் ராஜேந்திரன் நிறைவுரையாற்றினாா். முடிவில் மாவட்ட பொருளாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

வட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்துவதைத் தவிா்த்து, வரும் காலங்களில் வட்ட அளவில் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வ... மேலும் பார்க்க

4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த திரக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவா்... மேலும் பார்க்க

ஆரணி, வந்தவாசி, புதுப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசி நகராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு... மேலும் பார்க்க

வந்தவாசியில் அமைதி ஊா்வலம்

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை அடுத்து, அந்தக் கட்சி சாா்பில் அமைதி ஊா்வலம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

சேதமடைந்த கிராமச் சாலையால் மக்கள் அவதி

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 616 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகர... மேலும் பார்க்க