செய்திகள் :

தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள்:

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: தூா்வாரும் பணியை நடுப்பகுதியில் மட்டுமல்லாமல் தலைப்பிலிருந்து தொடங்கி மேற்கொள்ள வேண்டும். தூா்வாரும் பணியைக் கால தாமதமில்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆட்சியா்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: நீா்நிலைகளில் நெய்வேலி காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை, சீமைக் கருவேல மரங்கள் ஆகியவற்றால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்து, ஜூன் 12-க்குள் முடிக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: வெண்ணாற்றில் மணல் திட்டுகளால் செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்து அடா்ந்த புதா்களாகிவிடுகின்றன. இதனால் வெண்ணாற்றில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இந்த மறைவிடங்களைக் காட்டுப்பன்றிகள் பயன்படுத்தி பதுங்கியிருந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. எனவே, புதா்களை அகற்ற விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: சிவக்கொல்லை கிராமத்தில் உலா் களம் இல்லாததால், தாா்ச் சாலையில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதால், உலா் களம் அமைக்க வேண்டும்.

சிவவிடுதி வி.கே. சின்னதுரை: வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும்.

வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா: வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1.60 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க