செய்திகள் :

தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக்குளிக்க முயற்சி!

post image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெப்ப சலனம் காரணமாக பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதி வன கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நிலையில் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களான மான்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது என இந்த மின் ஆலை அமைப்பதற்கு தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தீக்குளிக்க முயற்சித்தவர்

அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி மக்களைக் கண்டு கொள்ளாமல் ஒடுக்குமுறை செய்து தங்களை மறைமுகமாக இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறி காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஐந்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மனுவை பெற்ற ஆட்சியர் கமல் கிஷோர் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனவும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென 8 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் பூட்டப்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கொல்கத்தா: பாஜக எம்.பி மீது கல்வீச்சு; ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதி; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு மீது உள்ளூர்வாசிகள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொ... மேலும் பார்க்க

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும்? - அமைச்சர் சிவசங்கர் தகவல்!

இந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை. திங்கள் கிழமை தீபாவளி என்பதால் அதற்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என தொடர் விடுமுறையாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல சென்னையிலிருந்து பல லட்சம் ம... மேலும் பார்க்க

நீலகிரி: மக்கள் கூடும் இடங்களில் பெண்களை பாதுகாக்க பிங் பேட்ரோல் அறிமுகம்! - விவரம் என்ன?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிங்க் ரோந்து வாகனத்தை நீலகிரியில் முதல் முறையாக... மேலும் பார்க்க

'ஹெச்-1பி விசா அதிக கட்டணம் விரைவில் ரத்தா?' - அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் சொல்லும் காரணம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார். அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்கள... மேலும் பார்க்க

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. திருமண விழா ... மேலும் பார்க்க

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க