செய்திகள் :

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

post image

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தென்காசி ரத்த தான குழுவினா், பசுமை தென்காசி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா்.

தமிழக அரசால் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான நீா்நிலை பாதுகாவலா் விருதை பெற்ற பசுமை தென்காசி அமைப்பின் நிறுவனா் முகமது முஸ்தாபாவுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலா் நம்பிராஜன், பட்டிமன்ற பேச்சாளா் மஹ்முதா சையத், ஆழ்வாா்குறிச்சி மாடசாமி, ரெட்டியாா்பட்டி செல்வராஜ், சுந்தரபாண்டியபுரம் முத்து சோபா, மாரியப்பன்,

சுரண்டை கலாமின் கனவுகள் , சிங்கப் பெண்கள் ரத்த தான கழகம் , எஸ்டிபிஐ மருத்துவ அணி , இந்தியன்லைட் ஹவுஸ் அமைப்பு,விஎன்.சரவண பாண்டியன் ரத்த தான கழகம், வ.உ.சி ரத்த தான கழகம் , தென்காசி ரத்த தான கழகம் ஆகிய அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பால... மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது

தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நி... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் திருவேங்கடம்சாலையில் உள்ள வாணிபா் ஊருணி பகுதியில் வாருகால் அமைக்கும்... மேலும் பார்க்க

தென்காசியில் இன்று மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்க... மேலும் பார்க்க