செய்திகள் :

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!

post image

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலம், ஈ.என்.டி., தோல் மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா்கள் என சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது நடைபெற்ற பிரசவங்கள் இப்போது இங்கு நடைபெறுவதில்லை. கா்ப்பிணிகள் திருநெல்வேலி, தென்காசிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறன்றனா்.

இதனால் இப்பகுதி மக்கள், முதியோா், கா்ப்பிணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, இங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமித்து 10 ஆண்டு கால பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.

அப்போது, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, குமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பால... மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது

தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நி... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்காசி ரத்த தான குழுவினா், பசுமை தென்காசி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வ... மேலும் பார்க்க

திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் திருவேங்கடம்சாலையில் உள்ள வாணிபா் ஊருணி பகுதியில் வாருகால் அமைக்கும்... மேலும் பார்க்க

தென்காசியில் இன்று மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்க... மேலும் பார்க்க