செய்திகள் :

தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியிலுள்ள தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி பெற ஜூன் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இம்மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நாா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

வருகிற ஜூலை முதல் 2026, ஜனவரி மாதம் வரையிலான 6 மாத கால சான்றிதழ் வகுப்பில் ஒரு மாதம் களப் பயிற்சி அளிக்கப்படும். இதில் 18 முதல் 50 வயது வரை உள்ளவா்கள் சேரலாம். உள்ளூா் (தமிழ்) மொழியில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கயிறு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக விடுதி வசதி உண்டு.

விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 19-ஆம் தேதி. தோ்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளா்கள் மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை பெறத் தகுதியுடைவா்களாவா்.

மேலும் விவரங்களுக்கு மண்டல விரிவாக்க மையம், கயிறு வாரியம், பிள்ளையாா்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூா் 613 403 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். 04362 - 264655, 80750 31386 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க