செய்திகள் :

தென்னை மரங்களிள் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல்: பூச்சியியல் மேலாண்மைக்கு அறிவுறுத்தல்

post image

மதுரை மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்களின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மதுரை மாவட்டம், மேலூா் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவற்றின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.

வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் அடியிலிருந்து சாறை உறிஞ்சி, அதிகளவிலான கழிவை வெளியேற்றுகின்றன. இதில் உள்ள ஈரத்தன்மையில் காற்றில் உள்ள கரும்பூசணம் படிந்து தென்னை ஓலைகள் கருப்பு நிறமாக மாறுகின்றன.

தென்னைக்கு சேதம் ஏற்படுத்தும் இந்தப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் கி. சுரேஷ் கூறியதாவது: தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளை ஈக்களை அழிக்க தென்னை ஓலையின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும். பிறகு, 5 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட மஞ்சள் நிற பாலித்தின் தாள்களில் இரு புறமும் விளக்கெண்ணையைத் தடவி ஏக்கருக்கு 20 வீதம், தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்கவிடலாம்.

மேலூரில் தென்னையில் ஏற்பட்ட வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குதலை ஆய்வு செய்த மதுரை வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியா் கி. சுரேஷ் உள்ளிட்டோா்

அபேடோக்கிரைசா இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் இணைக்கலாம். என்காா்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் அல்லது 10 மரங்களுக்கு ஓா் இலை துண்டு என்ற எண்ணிக்கையில் தென்னை ஓலைகளில் இணைக்க வேண்டும்.

ஒரு லிட்டா் தண்ணீருடன் 5 மி.லி. வேப்ப எண்ணெய், ஒட்டும் திரவம் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து மரங்களின் அடி கீற்றுகளில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். தென்னை ஓலையில் படா்ந்துள்ள கரும்பூசணத்தை நீக்குவதற்கு 25 கிராம் மைதா மாவு பசையை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க