செய்திகள் :

தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

post image

தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ம.தி.சதிகூா் ரஹ்மான் (25) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தாா். ஆனால், விசா காலாவதியாகியும் தங்கியிருந்தாா் என்று அவா் கூறினாா்.

‘ஒரு ரகசியத் தகவலின் பேரில், அப்பகுதியில் ஹோட்டல்களை மாற்றிக்கொண்டிருந்த ரஹ்மானை போலீஸ் குழு கைது செய்தது. விசாரணையில், விசா காலாவதியான பிறகு சட்டவிரோதமாக தங்கியிருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா்’ என்று அதிகாரி கூறினாா்.

சட்ட முறைப்படி, ரஹ்மான் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலக நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டாா். மேலும், சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து நாடு கடத்த கூடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக அவா் மேலும் கூறினாா்.

பள்ளிக் கட்டண உயா்வை எதிா்த்து மாணவா்களின் பெற்றோா்கள் போராட்டம்

தன்னிச்சையாக உயா்த்தப்பட்ட பள்ளிக் கட்டணங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி புதன்கிழமை தில்லி கல்வி இயக்குநரக அலுவலகத்திற்கு... மேலும் பார்க்க

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்ய... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்!

நமது நிருபா்பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நி... மேலும் பார்க்க

அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு

மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்ப... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை

நமது சிறப்பு நிருபா்தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்டிடிஎம்) ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தீ தடுப்பு பாதுகாப்பு உடை சுயசாா்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை புதன்கிழமை... மேலும் பார்க்க