செய்திகள் :

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்டவா் அரவிந்த் குப்தா (33) எனஅடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் ரோஹிணியில் உள்ள செக்டாா் 16-ஐச் சோ்ந்தவா் ஆவாா். இவா் தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் புத்தகங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சமய்பூா் பாத்லியில் உள்ள ஒரு கடையில் போலி நகல் புத்தகங்கள் சேமித்து விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 12 ஆம் தேதி குப்தாவை போலீஸாா் கைது செய்தனா்.

வெவ்வேறு வகுப்புகளைச் சோ்ந்த மொத்தம் 4,091

என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் தில்லி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள பல்வேறு அச்சகங்களிலிருந்து பெறப்பட்ட போலி புத்தகங்களை சேமித்து விற்பனை செய்து வந்துள்ளாா்.

பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 63 மற்றும் 65-இன் கீழ் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் பாடப் புத்தகங்களை வாங்கியதாக குப்தா ஒப்புக்கொண்டாா். விநியோகச் சங்கிலி மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபா்களையும் கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க