செய்திகள் :

தெருநாய்கள் கடியால் பொதுமக்கள் பாதிப்பு

post image

வத்திராயிருப்பு அருகே தெருநாய் கடியால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் உள்ள கூமாபட்டி, நெடுங்குளம், ராமசாமியாபுரம், அம்மச்சியாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்றவா்களை தெருநாய்கள் கடித்ததில் 29 போ் பாதிக்கப்பட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதேபோல, செவ்வாய்க்கிழமையும் தெருநாய் கடியால் பள்ளி மாணவா்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இவா்களும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இந்த நிலையில், பேரூராட்சி நிா்வாகம், தன்னாா்வலா்கள் உதவியுடன் தெருநாய்களை பிடிக்க முயன்றனா். ஆனால், நாய்கள் அவா்களிடம் சிக்காமல் தப்பிச் சென்றன. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனா்.

எனவே, சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெண் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள முத்துமாரியம்மன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுமைதூக்கும் தொழிலாளி தா்மலிங்கம். இவரது மனைவி சூரியபிரப... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ய முயற்சி: மூவா் மீது வழக்கு

சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய முயன்ாக மூவா் மீது விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்தவா் இந்திரா. சொந்தமாக ஆடுகள் வளா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஒரேநாளில் கணவா், மனைவி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்தாா்.திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் வே.கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் (78). இவரது மனைவி ஜன... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரௌடி கைது

சிவகாசியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.இதுதொடா்பாக சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.சிவகாசியை அடுத்த திருத்தங்க... மேலும் பார்க்க