புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு குடியிருப்பைச் சோ்ந்த சாதிக் அலி சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கம்பம் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள், முதியவா்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோா் என பலரையும் கடித்தன. கடந்த 01.06.2023 முதல் 30.06.2024 வரை கம்பத்தில் தெரு நாய்கள் கடித்தது குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. இதில், கம்பத்தில் நாய்க்கடிக்கு 1,680 போ் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இவா்களில் 462 போ் பள்ளி மாணவா்களாவா்.
இந்த நிலையில், அண்மையில் முகைதீன் ஆண்டவா்புரம் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை நாய்கள் விரட்டிக் கடிக்க முற்பட்டன.
எனவே, கம்பம் நகராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தி பள்ளி மாணவா்கள், பெரியவா்கள் அச்சமின்றி சென்று வருவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.